என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே லாரி பட்டறை தொழிலாளி குத்திக் கொலை- சொத்திற்காக அண்ணனே கொன்றது அம்பலம்
Byமாலை மலர்23 Aug 2019 10:11 AM GMT (Updated: 23 Aug 2019 10:11 AM GMT)
தர்மபுரி அருகே லாரி பட்டறை தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி டவுன் சத்யா நகரை சேர்ந்தவர் காவேரி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
இவருக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் வெங்கடாஜலபதிக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். மற்றொரு மகன் நரசிம்மன் லாரி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
காவேரிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பிரிப்பதில் அவரது மகன்களான வெங்கடாஜலபதிக்கும், நரசிம்மனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று மாலை நரசிம்மனும், அவரது நண்பர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் மோட்டார் சைக்கிளில் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வழிமறித்து நரசிம்மனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் நரசிம்மன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
இதுகுறித்து அவருடன் வந்த நண்பர் மணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து காயங்களுடன் கிடந்த நரசிம்மனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே நரசிம்மனுக்கும், அவரது அண்ணன் வெங்கடாஜலபதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நரசிம்மனும், நண்பர் மணியும் மோட்டார் சைக்கிளில் 4ரோடு பகுதி வழியாக சென்றபோது நரசிம்மனின் அண்ணன் வெங்கடாஜலபதி மற்றொரு மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்து வழிமறித்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நரசிம்மனை சரமாரியாக குத்தினார்.
அதனை தடுக்க சென்று மணியை கத்தியை காட்டி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சொத்திற்காக நரசிம்மனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய அவரது அண்ணன் வெங்கடாஜலபதியை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நரசிம்மன் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு அருகே இந்த கொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி டவுன் சத்யா நகரை சேர்ந்தவர் காவேரி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
இவருக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் வெங்கடாஜலபதிக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். மற்றொரு மகன் நரசிம்மன் லாரி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
காவேரிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பிரிப்பதில் அவரது மகன்களான வெங்கடாஜலபதிக்கும், நரசிம்மனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று மாலை நரசிம்மனும், அவரது நண்பர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் மோட்டார் சைக்கிளில் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வழிமறித்து நரசிம்மனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் நரசிம்மன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
இதுகுறித்து அவருடன் வந்த நண்பர் மணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து காயங்களுடன் கிடந்த நரசிம்மனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே நரசிம்மனுக்கும், அவரது அண்ணன் வெங்கடாஜலபதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நரசிம்மனும், நண்பர் மணியும் மோட்டார் சைக்கிளில் 4ரோடு பகுதி வழியாக சென்றபோது நரசிம்மனின் அண்ணன் வெங்கடாஜலபதி மற்றொரு மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்து வழிமறித்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நரசிம்மனை சரமாரியாக குத்தினார்.
அதனை தடுக்க சென்று மணியை கத்தியை காட்டி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சொத்திற்காக நரசிம்மனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய அவரது அண்ணன் வெங்கடாஜலபதியை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நரசிம்மன் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள 4 ரோடு அருகே இந்த கொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X