என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றம் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை
Byமாலை மலர்22 Aug 2019 9:09 AM GMT (Updated: 22 Aug 2019 9:09 AM GMT)
செங்குன்றம் அருகே அம்மன் கோவில் கேட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம், செட்டிமேட்டில் சக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 15-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலில் கிரில் கேட் உடைக்கப்பட்டு பிரதான கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோயிலில் இருந்த வெள்ளி பூஜை சாமான்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலி மற்றும் பித்தளை அண்டா உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X