search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    செங்குன்றம் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை

    செங்குன்றம் அருகே அம்மன் கோவில் கேட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம், செட்டிமேட்டில் சக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 15-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலில் கிரில் கேட் உடைக்கப்பட்டு பிரதான கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோயிலில் இருந்த வெள்ளி பூஜை சாமான்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலி மற்றும் பித்தளை அண்டா உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×