search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    நெட்டப்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

    நெட்டப்பாக்கம் அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு அருகே உள்ள சூரமங்கலம் பேட்டை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சேதுபதி (வயது 15). துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். அவரது மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் சேதுபதி தனது பெரியம்மாள் கன்னியம்மாள் வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இது பற்றி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விமல்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×