என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - ஏ.சி.சண்முகம் வரவேற்பு
Byமாலை மலர்15 Aug 2019 8:59 AM GMT (Updated: 15 Aug 2019 8:59 AM GMT)
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டம். அவ்வாறு இருப்பதனால் வளர்ச்சி திட்டங்கள் முழுவதும் சென்றடைய கால தாமதமாகின்றது. இதன் காரணமாக நிர்வாக வசதிக்காக, வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது, அம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கையை ஏற்று, வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாக பிரிக்கின்ற இனிய அறிவிப்பினை, சுதந்திர தின பரிசாக வேலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும். புதியதாக உருவாக்கப்படும் 3 மாவட்டங்களும் அரசின் பல்வேறு திட்டங்களினால் சிறப்பான வளர்ச்சியை அடையும். படித்த இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டம். அவ்வாறு இருப்பதனால் வளர்ச்சி திட்டங்கள் முழுவதும் சென்றடைய கால தாமதமாகின்றது. இதன் காரணமாக நிர்வாக வசதிக்காக, வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது, அம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கையை ஏற்று, வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாக பிரிக்கின்ற இனிய அறிவிப்பினை, சுதந்திர தின பரிசாக வேலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும். புதியதாக உருவாக்கப்படும் 3 மாவட்டங்களும் அரசின் பல்வேறு திட்டங்களினால் சிறப்பான வளர்ச்சியை அடையும். படித்த இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X