என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள்
Byமாலை மலர்12 Aug 2019 6:18 PM GMT (Updated: 12 Aug 2019 6:18 PM GMT)
மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
பொன்னேரி:
பொன்னேரியில் வேளாண் மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயது அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வுதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது தங்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.
இந்த முகாமில் வேளாண் மை அலுவலர் டில்லிகுமார், துணை வேளாண்மை அலுவலர் நாயகம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஐஸ்வர்யா, சிவலிங்கம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில் வேளாண் மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயது அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வுதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது தங்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.
இந்த முகாமில் வேளாண் மை அலுவலர் டில்லிகுமார், துணை வேளாண்மை அலுவலர் நாயகம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஐஸ்வர்யா, சிவலிங்கம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X