என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து பலி
Byமாலை மலர்10 Aug 2019 10:30 AM GMT (Updated: 10 Aug 2019 10:30 AM GMT)
லாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை பாரதிநகர் விரிவாக்கம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது46). மின்துறை ஊழியர். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. வேலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவரது மனைவி நிர்மலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலனை விட்டு பிரிந்து அவரது மனைவி நிர்மலா தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் வேலன் தனது அண்ணன் சாந்தகுமார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்தினால் வேலனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வேலன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாஸ்பேட்டை பாரதிநகர் விரிவாக்கம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது46). மின்துறை ஊழியர். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. வேலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவரது மனைவி நிர்மலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலனை விட்டு பிரிந்து அவரது மனைவி நிர்மலா தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் வேலன் தனது அண்ணன் சாந்தகுமார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்தினால் வேலனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வேலன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X