என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளத்தில் காதலிக்க வற்புறுத்தி ஆசிரியைக்கு கொலை மிரட்டல்- மீன் வியாபாரி கைது
Byமாலை மலர்8 Aug 2019 10:56 AM GMT (Updated: 8 Aug 2019 10:56 AM GMT)
சாத்தான்குளத்தில் காதலிக்க வற்புறுத்தி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவில்பிச்சை மகள் அஜிந்தா(வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் செல்வகுமார்(31). இவர் நேற்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அஜிந்தாவை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேராக வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து அவரை பின் தொடர்ந்து வந்த செல்வகுமார் வீட்டில் வைத்து காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அஜிந்தா புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று செல்வகுமாரை கைது செய்தனர்.
சாத்தான்குளம் தச்சமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவில்பிச்சை மகள் அஜிந்தா(வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் செல்வகுமார்(31). இவர் நேற்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அஜிந்தாவை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேராக வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து அவரை பின் தொடர்ந்து வந்த செல்வகுமார் வீட்டில் வைத்து காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அஜிந்தா புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று செல்வகுமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X