search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அய்யம்பேட்டை அருகே அடகு கடையில் நகை திருடிய நேபாள வாலிபர் கைது

    அய்யம்பேட்டை அருகே அடகு கடையில் நகை திருடிய நேபாளத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் ஜார்ஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜன்சதீஷ் (வயது 38). இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த ஒரு பவுன் சங்கிலி மற்றும் ஒரு லேப்-டாப் ஆகியவை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜன் சதிஷ் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மர்மமான முறையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நேபாள நாட்டைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் தீபக் (வயது 22) என்பதும் இவர் ராஜன் சதீஷ் அடகு கடையில் நகை, லேப்-டாப் திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து தீபக்கை கைது செய்த போலீசார் மேலும் பல திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×