என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே மனைவியுடன் தகராறு- டீக்கடைக்காரர் தற்கொலை
ஆண்டிப்பட்டி:
தேனிமாவட்டம் ஜம்புலிபுத்தூரை சேர்ந்தவர் சண்முகசுந்தர் (வயது52). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அமுதா. இவர்கள் தங்கள் மகளை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் சண்முகசுந்தருக்கும், அமுதாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சண்முகசுந்தர் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக மனைவியை குடும்பம் நடத்த வருமாறு சண்முகசுந்தர் அழைத்தார். அதற்கு அவர் மறுத்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகசுந்தர் விஷத்தை குடித்து விட்டார்.
உடனே அவரை ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகசுந்தர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வைகைடேம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்