search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வெம்பாக்கம் அருகே விதவை பெண் கொன்று புதைப்பு- 2 பேர் சிக்கினர்

    வெம்பாக்கம் அருகே விதவை பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 45). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இதனால் செண்பகவள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி செண்பகவள்ளி திடீரென காணாமல் போனார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் ராசாத்தி பல இடங்களில் செண்பகவள்ளியை தேடினார். ஆனால் அவர்கிடைக்க வில்லை.

    இதையடுத்து தூசி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    மேலும் செண்பக வள்ளியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து காணாமல் போன அன்று யார் யாருடன் பேசியுள்ளார் என விசாரணை நடத்தினர்.

    இதில் அதே பகுதியை சேர்ந்த செண்பகவள்ளியின் உறவினர்களான இளங்கோவன், தினேஷ்குமார் கடைசியாக அவருடன் பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து தினேஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் இளங்கோவையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் செண்பகவள்ளியை வெட்டி கொலை செய்து கல்குவாரி அருகே புதைத்துவிட்டதாக கூறினர். இதையடுத்து வெம்பாக்கம் தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலையில் செண்பகவள்ளியின் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் இன்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×