என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிப்பு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்23 July 2019 9:22 AM GMT (Updated: 23 July 2019 9:22 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளியினின் மோட்டார்சைக்கிளுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தொத்தி குடிசை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 39). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்துபோது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் காணவில்லை.
இந்தநிலையில் டி.எடையார் பஸ்நிறுத்தம் அருகே சாலைஓரம் மோட்டார்சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிந்த நிலையில் கிடப்பதாக மோகனுக்கு தகவல் கிடைத்தது.
உடனே மோகன் அங்கு சென்று பார்த்தார். அது தனது மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்தார்.
யாரோ? மர்மமனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இந்தசம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசில் மோகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை கடத்தி தீ வைத்து எரித்தது யார்? முன்விரோதம் காரணமாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தொத்தி குடிசை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 39). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்துபோது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் காணவில்லை.
இந்தநிலையில் டி.எடையார் பஸ்நிறுத்தம் அருகே சாலைஓரம் மோட்டார்சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிந்த நிலையில் கிடப்பதாக மோகனுக்கு தகவல் கிடைத்தது.
உடனே மோகன் அங்கு சென்று பார்த்தார். அது தனது மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்தார்.
யாரோ? மர்மமனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இந்தசம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசில் மோகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை கடத்தி தீ வைத்து எரித்தது யார்? முன்விரோதம் காரணமாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X