search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்பு படம்)
    X
    தற்கொலை (கோப்பு படம்)

    தண்டனைக்கு பயந்து 2 வாலிபர்கள் தற்கொலை

    தண்டனைக்கு பயந்து ஊட்டி ஏரியில் குதித்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 24). இவரது நண்பர் டென்னி.இருவரும் கடந்த 14-ந்தேதி திடீரென மாயமானார்கள். இது குறித்து அவர்களது பெற்றோர் ஊட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை படகு இல்ல ஏரி ஊழியர்கள் ஏரியில் 2 உடல்கள் மிதப்பதை பார்த்தனர். அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு சோதனை செய்தபோது அது மாயமான கவுதம் மற்றும் டென்னி என்பது தெரியவந்தது. இது குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் கவுதம், டென்னி ஆகியோர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஊட்டி பஸ் நிலையத்தில் மின் ஊழியர்களுடன் நடந்த கைகலப்பு மற்றும் அடிதடி விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும், இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட 2 வாலிபர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறினர். தண்டனைக்கு பயந்து ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவதாக ஊட்டி போலீசார் கூறினர்.
    Next Story
    ×