என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டனைக்கு பயந்து 2 வாலிபர்கள் தற்கொலை
Byமாலை மலர்18 July 2019 9:49 AM GMT (Updated: 18 July 2019 9:49 AM GMT)
தண்டனைக்கு பயந்து ஊட்டி ஏரியில் குதித்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 24). இவரது நண்பர் டென்னி.இருவரும் கடந்த 14-ந்தேதி திடீரென மாயமானார்கள். இது குறித்து அவர்களது பெற்றோர் ஊட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை படகு இல்ல ஏரி ஊழியர்கள் ஏரியில் 2 உடல்கள் மிதப்பதை பார்த்தனர். அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு சோதனை செய்தபோது அது மாயமான கவுதம் மற்றும் டென்னி என்பது தெரியவந்தது. இது குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கவுதம், டென்னி ஆகியோர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஊட்டி பஸ் நிலையத்தில் மின் ஊழியர்களுடன் நடந்த கைகலப்பு மற்றும் அடிதடி விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும், இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட 2 வாலிபர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறினர். தண்டனைக்கு பயந்து ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவதாக ஊட்டி போலீசார் கூறினர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 24). இவரது நண்பர் டென்னி.இருவரும் கடந்த 14-ந்தேதி திடீரென மாயமானார்கள். இது குறித்து அவர்களது பெற்றோர் ஊட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை படகு இல்ல ஏரி ஊழியர்கள் ஏரியில் 2 உடல்கள் மிதப்பதை பார்த்தனர். அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு சோதனை செய்தபோது அது மாயமான கவுதம் மற்றும் டென்னி என்பது தெரியவந்தது. இது குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கவுதம், டென்னி ஆகியோர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஊட்டி பஸ் நிலையத்தில் மின் ஊழியர்களுடன் நடந்த கைகலப்பு மற்றும் அடிதடி விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும், இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட 2 வாலிபர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறினர். தண்டனைக்கு பயந்து ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவதாக ஊட்டி போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X