என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் வாலிபர் கொலையில் நண்பர்களிடம் விசாரணை
திருப்பூர்:
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள சீனிவாசபுரம் சேப்னவாரியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (29). இவர் கடந்த 2 வருடங்களாக திருப்பூர் விஜயாபுரத்தில் தங்கி வீடுகளுக்கு கதவு செய்யும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோகுல கண்ணன் தனது நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கி உள்ளனர்.
இதில் கோகுல கண்ணன் தலை, வயிறு, உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அறைக்கு சென்று தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் எழுந்து வராததால் சந்கேம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கோகுல கண்ணன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை கோகுல கண்ணன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்குபதிவு செய்தனர்.
கோகுல கண்ணன் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று கோகுல கண்ணனுடன் அவரது நண்பர்கள் சுரேஷ், சக்தி ஆகியோர் இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்