என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிபட்டணம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி கடத்தல்
Byமாலை மலர்15 July 2019 5:04 PM GMT (Updated: 15 July 2019 5:04 PM GMT)
காவேரிபட்டணம் அருகே திருமணம் செய்யும் நோக்கத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தியை மாமா உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டபணம் அருகே உள்ள சவுளூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்த அந்த மாணவி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர்கள், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியின் மாமா சின்னசாமி மகன் சந்திரன்(33) மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோர் அந்த மாணவியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்த மாணவியன் தந்தை காவேரிபட்டணம் போலீசில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் சந்திரன் மற்றும் மணிகண்டன் மீது பெண் கடத்தல் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X