என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் மயக்கம்
Byமாலை மலர்12 July 2019 11:58 AM GMT (Updated: 12 July 2019 11:58 AM GMT)
திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். தனையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சிட்கோ தொழிற்சாலையில் தனபால் என்பவருக்கு சொந்தமான ஆலை உள்ளது. இங்கு கழிவு ஆயில்கள் சேகரித்து மறு சுழற்சி செய்யப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு ஆயில் வாங்கி வரப்படும்.
நேற்று மாலை ஒரு லாரி கழிவு ஆயில் ஏற்றிக் கொண்டு ஆலைக்கு வந்தது. இந்த ஆலையில் வாட்ச்மேனாக மேற்கு மரியநாதபுரம் திடீர் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 75) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் தொழிலாளியாக உள்ளார்.
லாரி வந்ததும் அதற்குள் இருந்த தொட்டிக்குள் இறங்கி முருகன் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்து அவர் சத்தம் போடவே செல்வராஜ் அவரை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினர்.
இதில் அவர்கள் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உள்ளே இருந்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தாக்கியதில் அவர்கள் மயக்கமடைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் சிட்கோ தொழிற்சாலையில் தனபால் என்பவருக்கு சொந்தமான ஆலை உள்ளது. இங்கு கழிவு ஆயில்கள் சேகரித்து மறு சுழற்சி செய்யப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு ஆயில் வாங்கி வரப்படும்.
நேற்று மாலை ஒரு லாரி கழிவு ஆயில் ஏற்றிக் கொண்டு ஆலைக்கு வந்தது. இந்த ஆலையில் வாட்ச்மேனாக மேற்கு மரியநாதபுரம் திடீர் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 75) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் தொழிலாளியாக உள்ளார்.
லாரி வந்ததும் அதற்குள் இருந்த தொட்டிக்குள் இறங்கி முருகன் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்து அவர் சத்தம் போடவே செல்வராஜ் அவரை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினர்.
இதில் அவர்கள் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உள்ளே இருந்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தாக்கியதில் அவர்கள் மயக்கமடைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X