search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு மணல் கடத்தல் நடைபெற்றதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்காக பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    எனவே அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளாம்பட்டி போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர். இருந்தபோதும் மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டே உள்ளது.

    நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி தலைமையில் போலீசார் சித்தர்கள்நத்தம் சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். அப்போது வைகை ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×