என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் - ராஜேந்திர பாலாஜி பேட்டி
சாத்தூர்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கே:- பால் விலை உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் அறிவித்துள்ளாரே?
பதில்:- பால் விலை உயர்த்தப்படும் என்று முதல் -அமைச்சர் கூறவில்லை. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படும். எனவே கொள்முதலும், நுகர்வோரும் பாதிக்காத வகையில் அந்த பணி இருக்கும் என்றார்.
கே:-மத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து என்ன?
ப:- வளமான நாடாக, ஏழைகள் இல்லாத நாடாக அமைய மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?.
ப:- மு.க.ஸ்டாலின் எதைத்தான் நல்லது என்று சொல்வார்? ராகுலை பிரதமர் என்றார். அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அவர் எதிர்கட்சி. அப்படித் தான் கூறுவார்.
கே:-அ.தி.மு.க. அரசை தி.மு.க. தான் வழி நடத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?.
ப:-அ.தி.மு.க.வை அ.தி.மு.க. தான் வழி நடத்துகிறது. நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.க. கூறுகிறது. அவர்கள் பேசாமல் அ.தி.மு.க.வில் இணைந்து கொள்ளவேண்டியது தானே.
கே:-மழை நீர் சேகரிப்பு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசா? தி.மு.க. அரசா?
கே:- மழைநீர் சேகரிப்பு கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவரை பின் பற்றியது தி.மு.க.
கே:-நதி நீர் இணைப்பு பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லையே?
ப:-பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் நடைமுறைக்கு வரும் என்பது இல்லை. அரசு நினைத்தால் எந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஜலசக்தி துறை என்று கொண்டு வந்துள்ளனர். அதில் நதி நீர் இணைப்பு வரும்.
கே:-பட்ஜெட்டில் பெட்ரோல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியால் விலைவாசி உயர்வு வரும். அதை தமிழக அரசு எப்படிபார்க்கிறது?
ப:-இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட நிலைப்பாடு. தமிழகம் மட்டும் அல்ல பொருளாதார உயர்வு வரவர, சம்பள உயர்வுகள் வரவர விலைவாசி உயரத் தான் செய்யும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த விலைவாசி உயர்வு இருக்கும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்