search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக நிதி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    சமூக நிதி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கோவையில் ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    கோவையில் ஆணவ படுகொலையை கண்டித்து சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோவை:

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும். இதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது. அதனை எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.

    கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் வி‌ஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவத்தை தடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    Next Story
    ×