என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரியாபட்டியில் லாரிகளில் குடிநீர் வினியோகம் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஏற்பாடு
Byமாலை மலர்22 Jun 2019 1:04 PM GMT (Updated: 22 Jun 2019 1:04 PM GMT)
காரியாபட்டியில் கடும் குடிநீர் பிரச்சினையை போக்க லாரி மூலம் பொது மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் பேரூராட்சிகளுக்கும், கிராமங்களுக்கும் சரியாக செல்லவில்லை.
மேலும் பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை இருந்து வருகிறது.
திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய 3 ஒன்றியங்களும், 2 பேரூராட்சிகளும் உள்ளன.
தற்போது இந்த பகுதிகளில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதை விருதுநகர் கலெக்டரிடம், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு குடிநீர் பிரச்சினையை போக்க மனு அளித்தார்.
மேலும் காரியாபட்டியில் 11-வது வார்டு, 12-வது வார்டு பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறைதான் பேரூராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த கடும் குடிநீர் பிரச்சினையை போக்க லாரி மூலம் பொது மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் தமிழ் வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் பேரூராட்சிகளுக்கும், கிராமங்களுக்கும் சரியாக செல்லவில்லை.
மேலும் பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை இருந்து வருகிறது.
திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய 3 ஒன்றியங்களும், 2 பேரூராட்சிகளும் உள்ளன.
தற்போது இந்த பகுதிகளில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதை விருதுநகர் கலெக்டரிடம், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு குடிநீர் பிரச்சினையை போக்க மனு அளித்தார்.
மேலும் காரியாபட்டியில் 11-வது வார்டு, 12-வது வார்டு பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறைதான் பேரூராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த கடும் குடிநீர் பிரச்சினையை போக்க லாரி மூலம் பொது மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் தமிழ் வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X