search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
    X

    செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

    செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் அருண் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான நீலகிரி மாவட்டம் பந்தலூருக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், டாலர், வளையல், மோதிரம் உள்பட 6¼ பவுன் தங்க நகைகள், ஒரு டி.வி. ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அருண் செட்டிப்பாளைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் டி.வி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×