search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே மூதாட்டி தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    கபிஸ்தலம் அருகே மூதாட்டி தற்கொலை- போலீசார் விசாரணை

    கபிஸ்தலம் அருகே வயிற்று வலி காரணமாக மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே இளங்கார்குடியை சேர்ந்தவர் சிவகாமசுந்தரி (வயது 65). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதற்காக பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    இதில் மனமுடைந்த சிவகாமசுந்தரி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×