search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தவாசல் அருகே கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல்
    X

    சந்தவாசல் அருகே கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல்

    சந்தவாசல் அருகே கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அடுத்த கேளூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (37). கட்டிட மேஸ்திரி. நேற்று காலை வீரக்கோவில் அருகே பணிக்கு செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு கேளூர் காலனியைச் சேர்ந்த தினேஷ் (19), பூவரசன் (19) ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை ஏன்? சண்டை போடுகீறீர்கள் என வெங்கடேசன் தட்டி கேட்டார்.

    அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து வெங்கடேசனை இரும்பு கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த வெங்கடேசன் போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்தவாசல் போலீசார் விசாரணை நடத்தி தினேஷ், பூவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×