என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டூடியோ அதிபர் கொலை - தீக்குளித்த காதலி பலி
Byமாலை மலர்13 Jun 2019 11:03 AM GMT (Updated: 13 Jun 2019 11:03 AM GMT)
ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த சம்பவம் அறிந்த அவரது காதலி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் ரெசி (வயது 33), ஸ்டூடியோ அதிபர்.
கன்னியாகுமரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் கேத்தீஸ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டிற்கு வரும்போது, அவரது சகோதரி அனுஷா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ரெசி, அனுஷாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு கேத்தீஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ரெசியை கேத்தீஸ்வரன் அவரது நண்பர்கள் பைசல், பழனி ஆகிய 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
பின்னர் பிணத்தை கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பைசல், பழனி ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ரெசி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அனுஷா மனம் உடைந்து காணப்பட்டார். வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுஷா தற்கொலை குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுஷாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் ரெசி (வயது 33), ஸ்டூடியோ அதிபர்.
கன்னியாகுமரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் கேத்தீஸ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டிற்கு வரும்போது, அவரது சகோதரி அனுஷா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ரெசி, அனுஷாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு கேத்தீஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ரெசியை கேத்தீஸ்வரன் அவரது நண்பர்கள் பைசல், பழனி ஆகிய 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
பின்னர் பிணத்தை கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பைசல், பழனி ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ரெசி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அனுஷா மனம் உடைந்து காணப்பட்டார். வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுஷா தற்கொலை குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுஷாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X