என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குழந்தை இல்லாத விரக்தி- மனைவி நடத்தையால் வாலிபர் தற்கொலை
மதுரை:
மதுரை கல்மேடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 60). இவர்களுக்கு 13 குழந்தைகள். 7-வது மகன் செல்வம் (35). இவருக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் ஆர்த்திக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை செல்வம் கண்டித்தார். ஆனாலும் ஆர்த்தி கள்ளக்காதலை தொடர்ந்தார்.
இதனால் விரக்தி அடைந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தாயார் அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை ஊத்துக்காலனியைச் சேர்ந்த வையாபுரி மனைவி சின்னப்பொண்ணு (65). இவர் துவரிமானில் உள்ள புல்லூத்து கால்வாய் பகுதியில் மாடு மேய்க்க சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே சின்னப்பொண்ணு வழியிலேயே பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்