search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சியில் காரில் கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது
    X

    செஞ்சியில் காரில் கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

    செஞ்சியில் காரில் கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் செஞ்சி- திண்டிவனம் சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான அட்டை பெட்டிகள் இருந்தன.

    அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்த போது அதில் வெடி பொருட்கள் இருந்தன.

    இது குறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய பாரியப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன்( வயது 23) என்பதும் காரில் வெடிபொருட்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்தனர். மேலும் வெடிபொருட்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

    வெடிபொருட்களை கருணாகரன் காரில் எங்கு கடத்தி செல்கிறார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×