என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
Byமாலை மலர்26 April 2019 10:26 AM GMT (Updated: 26 April 2019 10:26 AM GMT)
திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே உள்ள காட்டு நாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவடிவேல். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 23) எனபவருக்கும், கூடலூரைச் சேர்ந்த சுவாமிநாதன் (28) என்பவருக்கும் கடந்த 6.9.2018-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
திருமணமான சில மாதங்களிலேயே மனைவியின் சிறிது நகைகளை வாங்கி கணவர் வீட்டார் அடகு வைத்து விட்டனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து சிவரஞ்சனி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் சுவாமிநாதன், மாமனார் ஒண்டிவீரப்பன், மாமியார் சந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X