search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
    X

    தேனி அருகே திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

    திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள காட்டு நாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவடிவேல். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 23) எனபவருக்கும், கூடலூரைச் சேர்ந்த சுவாமிநாதன் (28) என்பவருக்கும் கடந்த 6.9.2018-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    திருமணமான சில மாதங்களிலேயே மனைவியின் சிறிது நகைகளை வாங்கி கணவர் வீட்டார் அடகு வைத்து விட்டனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து சிவரஞ்சனி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் சுவாமிநாதன், மாமனார் ஒண்டிவீரப்பன், மாமியார் சந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×