search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    114 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர் மட்டம்

    மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 114 அடியாக குறைந்துள்ளது. #MullaPeriyarDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த போதும் நீர் மட்டம் உயர கைகொடுக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 136 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் குறைந்து தற்போது 114.05 அடியாக உள்ளது. 73 கன அடி நீர் வருகிறது. குடிநீருக்காக மட்டும் 170 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையின் நீர் மட்டமும் 45.41 அடியாக குறைந்துள்ளது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது.

    வரத்து இல்லாத நிலையில் 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.43 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. #MullaPeriyarDam
    Next Story
    ×