search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய பெங்களூரு சிறுமி மீட்பு
    X

    பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய பெங்களூரு சிறுமி மீட்பு

    தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய பெங்களூரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூர் மாநிலம் மனோரஞ்சிதபாலையா பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மகள் சித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சித்ரா தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ரெயில் ஏறி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

    ரெயிலில் இருந்து இறங்கிய அவர் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சிறுமியை வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.

    Next Story
    ×