என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்8 Feb 2019 9:43 AM GMT (Updated: 8 Feb 2019 9:43 AM GMT)
அரசு பள்ளி ஆசிரியை மர்மமான முறையில் இறந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்து பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆனபாய சோழன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 30). இவர்களுக்கு ஒரு வயதில் பாலவர்மன் என்ற மகன் உள்ளான். ஆர்த்தி, நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கணவருக்கும், ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஆர்த்தி, தனது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை உறவினர் வீட்டில் இருந்த ஆர்த்தி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் குடும்பத்தினர், உடனடியாக ஆர்த்தியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை ஆர்த்தி, குடும்ப தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்து பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆனபாய சோழன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 30). இவர்களுக்கு ஒரு வயதில் பாலவர்மன் என்ற மகன் உள்ளான். ஆர்த்தி, நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கணவருக்கும், ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஆர்த்தி, தனது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை உறவினர் வீட்டில் இருந்த ஆர்த்தி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் குடும்பத்தினர், உடனடியாக ஆர்த்தியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை ஆர்த்தி, குடும்ப தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X