search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 57 பேர் சிறையில் அடைப்பு
    X

    தேனி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 57 பேர் சிறையில் அடைப்பு

    தேனி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று கம்பம் சாலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லதம்பி தலைமையில் 57 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தேனி நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 1583 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். கம்பம் சாலையில் மறியல் செய்த ஞானதம்பி உள்பட 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    Next Story
    ×