search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது
    X

    திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

    திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் குட்டை குளத்தைச் சேர்ந்தவர் கலீல் (வயது 24). கடந்த 2015-ம் ஆண்டு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கலீலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார்.

    அவரை பிடித்து விசாரித்த போது திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த கலீல் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×