என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Byமாலை மலர்5 Nov 2018 4:48 PM GMT (Updated: 5 Nov 2018 4:48 PM GMT)
மணப்பாறையில் மின்சாரம் பாய்ந்து மாணவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஜார்ஜ் (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டின் அருகே ஜார்ஜ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, திடீரென மழை பெய்ததால் வீட்டுக்கு செல்ல மாடியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு ஏறினான். இந்நிலையில் அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதனால் அந்தகம்பியை பிடித்த மாணவனையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் வீட்டிற்கு செல்லும் சர்வீஸ் வயர் பழுதான நிலையில் இருந்ததால் அதில் இருந்த மின்சாரம் இரும்பு தகரம் வழியாக கம்பிக்கு சென்றதில் தான் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஜார்ஜ் (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டின் அருகே ஜார்ஜ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, திடீரென மழை பெய்ததால் வீட்டுக்கு செல்ல மாடியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு ஏறினான். இந்நிலையில் அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதனால் அந்தகம்பியை பிடித்த மாணவனையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் வீட்டிற்கு செல்லும் சர்வீஸ் வயர் பழுதான நிலையில் இருந்ததால் அதில் இருந்த மின்சாரம் இரும்பு தகரம் வழியாக கம்பிக்கு சென்றதில் தான் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X