என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வலங்கைமானில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்20 Oct 2018 4:53 PM GMT (Updated: 20 Oct 2018 4:53 PM GMT)
வலங்கைமானில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவருடைய மனைவி மங்கையர்கரசி. சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கையர்கரசி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப்படை போலீசார் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவருடைய மனைவி மங்கையர்கரசி. சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கையர்கரசி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப்படை போலீசார் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X