search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பல்கலைக்கழக அதிகாரி-பேராசிரியர் வீடுகளில் 30 பவுன் நகை கொள்ளை
    X

    மதுரையில் பல்கலைக்கழக அதிகாரி-பேராசிரியர் வீடுகளில் 30 பவுன் நகை கொள்ளை

    மதுரையில் பல்கலைக்கழக அதிகாரி, பேராசிரியர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அன்பு நகரில் உள்ள அன்னை அபிராமி தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது67). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று கோபிநாத் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 29 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். ஊர் திரும்பிய கோபிநாத் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை- பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தல்லாகுளம் விசாலாட்சி புரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் (52). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 1 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1500 ரொக்கம் ஆகிய வற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×