என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்26 Sep 2018 10:23 AM GMT (Updated: 26 Sep 2018 10:23 AM GMT)
புதுவையில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகர் ராஜராஜேஸ்வரி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 70). வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (59). இவர்களுடைய மகன் விஜயகுமார் (43). இவர் கோட்டகுப்பத்தில் வசித்து வருகிறார்.
இதனால் ரெயின்போ நகரில் ஆறுமுகம், மகாலட்சுமி மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று மகாலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டுக்கு பிரான்சில் இருந்து உறவினர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை கடற்கரைக்கு சென்று விட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து தனியாக தூங்கினர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ பின்பக்க வாசல் வழியாக வந்து 3 கதவுகளை உடைத்து வீட்டில் இருந்த 6 பீரோவில் 5 பீரோவை உடைத்தனர்.
அதில், ஒரு பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் மகாலட்சுமியின் கைப்பை யிலும் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது, மகாலட்சுமி வீட்டில் கதவு, பீரோ உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த நகை- பணத்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோட்டக்குப்பத்தில் உள்ள தனது மகன் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
புதுவை ரெயின்போ நகர் ராஜராஜேஸ்வரி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 70). வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (59). இவர்களுடைய மகன் விஜயகுமார் (43). இவர் கோட்டகுப்பத்தில் வசித்து வருகிறார்.
இதனால் ரெயின்போ நகரில் ஆறுமுகம், மகாலட்சுமி மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று மகாலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டுக்கு பிரான்சில் இருந்து உறவினர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை கடற்கரைக்கு சென்று விட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து தனியாக தூங்கினர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ பின்பக்க வாசல் வழியாக வந்து 3 கதவுகளை உடைத்து வீட்டில் இருந்த 6 பீரோவில் 5 பீரோவை உடைத்தனர்.
அதில், ஒரு பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் மகாலட்சுமியின் கைப்பை யிலும் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது, மகாலட்சுமி வீட்டில் கதவு, பீரோ உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த நகை- பணத்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோட்டக்குப்பத்தில் உள்ள தனது மகன் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X