search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமயபுரம் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர்கள் கைது
    X

    சமயபுரம் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர்கள் கைது

    சமயபுரம் வழியாக அனுமதி இன்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் வழியாக லாரிகளில் மணல் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை செய்த போது, அதில் விராலிமலையில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் (வயது 31), சந்தோஷ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். லாரி உரிமையாளர்களான ஜஸ்டின்ராஜ், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×