search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? - தமிழிசை கண்டனம்
    X

    விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? - தமிழிசை கண்டனம்

    விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி சமூக விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

    ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி உள்ளது. அந்த விழாக்களில் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொள்வது, கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது, சேவை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என மக்கள் விழாவாகவே மாறிவருகிறது.

    ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் பெருமான் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார் பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.


    முதல்-அமைச்சர் உடனே தலையிட்டு தேவையற்றக் கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள்தர வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள் படும், தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் என்னும் ஓங்கார வடிவமாய் விளங்கும் ஸ்ரீ விநாயகர் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  #BJP #TamilisaiSoundararajan #vinayagarchaturthi

    Next Story
    ×