என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அண்ணா நகரில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 3 பேர் கைது
போரூர்:
சென்னை அண்ணா நகர், மேற்கு திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அண்ணா நகர் மேற்கு பகுதியில் நேற்று காலை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீசை கண்டதும் தப்பி ஒட முயன்றனர். அவர்களை போலீஸ் ஏட்டு ரவி துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20). ஸ்ரீநாத் (20), பூந்தமல்லியைச் சேர்ந்த சசிகுமார்(20) என்பதும் பூந்தமல்லி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அண்ணா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 சவரன் நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்