search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் - 2 லாரிகள் பறிமுதல்
    X

    திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் - 2 லாரிகள் பறிமுதல்

    திருக்கோவிலூர் அருகே அனுமிதியின்றி மணல் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த கொடுக்கப்பட்டு பெரியாயி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர்களிடம் உரிய அனுமதியுடன் மணல் எடுத்துச் செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆடப்பட்டை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் சதீஷ்(வயது 24), வாசு மகன் ஏழுமலை(26) ஆகியோர் என்பதும், லாரிகளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்தியதாக சதீஷ், ஏழுமலை ஆகியோரை கைது செய்ததோடு, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×