என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் போலி டாக்டர் கைது
Byமாலை மலர்4 Sep 2018 10:05 AM GMT (Updated: 4 Sep 2018 10:05 AM GMT)
சேலத்தில் போலி டாக்டர் பழனிசாமியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாமாங்கம் மெயின் ரோட்டில் உள்ள ரெட்டிப் பெட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (65). இவர் அதே பகுதியில் பழனிசாமி என்ற பெரில் கிளீனிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜலகண்டாபுரம், அரசு மருத்துவமனை தலைமை அலுவலகத்தில் உள்ள துணை மருத்துவர் ரேவதிக்கு பழனிசாமி மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர் என்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் நேற்று இரவு சோதனை செய்வதற்காக பழனிசாமி கிளீனிக்குக்கு சென்ற டாக்டர் ரேவதி அவர் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தார். பின்பு இது குறித்து சூரமங்கலம் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிசாமி பி.எஸ்.சி படித்து 15 வருடமாக கிளீனிக் நடத்தியது தெரிய வந்தது. மேலும் இவரின் 2 மகன்களான கார்த்திக் பிசியோதெரபி படித்தவர் என்றும், மணிகண்டன் லேப் டெக்னீசியனாக பழைய சூரமங்கலத்தில் கிளீனிக் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பழனிசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மாமாங்கம் மெயின் ரோட்டில் உள்ள ரெட்டிப் பெட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (65). இவர் அதே பகுதியில் பழனிசாமி என்ற பெரில் கிளீனிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜலகண்டாபுரம், அரசு மருத்துவமனை தலைமை அலுவலகத்தில் உள்ள துணை மருத்துவர் ரேவதிக்கு பழனிசாமி மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர் என்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் நேற்று இரவு சோதனை செய்வதற்காக பழனிசாமி கிளீனிக்குக்கு சென்ற டாக்டர் ரேவதி அவர் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தார். பின்பு இது குறித்து சூரமங்கலம் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிசாமி பி.எஸ்.சி படித்து 15 வருடமாக கிளீனிக் நடத்தியது தெரிய வந்தது. மேலும் இவரின் 2 மகன்களான கார்த்திக் பிசியோதெரபி படித்தவர் என்றும், மணிகண்டன் லேப் டெக்னீசியனாக பழைய சூரமங்கலத்தில் கிளீனிக் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பழனிசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X