search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயின் துறவி மரணம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
    X

    ஜெயின் துறவி மரணம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    ஜெயின் துறவி மறைவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஜெயின் மதத்துறவி முனி தருண் சாகர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஜெயின் சமயத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவரும், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய பண்பாளருமான துறவி முனி தருண் சாகர் மறைவு ஜெயின் சமயத்திற்கு பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் ஜெயின் சமயத்தின் பெரியோர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    Next Story
    ×