search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு
    X

    சேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு

    சேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்த மணி என்பவரின் மகன் சாம்பசிவம்(வயது 26). இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் உள்ள ஒரு வாலிபர் சாம்பசிவத்திடம் இருந்து நைசாக செல்போனை எடுத்து அருகில் உள்ள அவர் நண்பரிடம் கொடுத்தார். அதை அருகில் உள்ள ஒருவர் பார்த்து சத்தம் போடவே 2 பேரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில். சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஆனந்த்ராஜ்(21), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சுந்திர மூர்த்தி மகன் ரஞ்சித்(23) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×