search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் உடல் கருகினார்
    X

    கோவையில் ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் உடல் கருகினார்

    கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.

    6-வது பிளாட்பாரத்துக்கு சென்ற அவர் அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் மீது ஏறினார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் திடீரென அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த வயரை பிடித்தார். கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் அந்த வாலிபர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த ரெயில் பயணிகள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 80 சதவீத காயங்களுடன் உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்.

    ரெயில்வே போலீசார் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜான் (வயது 20) என்பதும், வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சரியாக பேச முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×