search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: டாஸ்மாக் விற்பனையாளர் பலி
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: டாஸ்மாக் விற்பனையாளர் பலி

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நெல்வாய் சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன், திருநின்றவூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்றுபணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற போது தொழுவூர் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    Next Story
    ×