search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே ஊர்க்காவல்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
    X

    ஓமலூர் அருகே ஊர்க்காவல்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

    ஊர்க்காவல்படை பெண் போலீஸ் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ராஜலட்சுமி (34). இவர் ஊர்க்காவல் படையில் போலீசாக உள்ளார்.

    இவருக்கும், இவரது கணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி அருகே உள்ள விவசாயி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டனர்.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவரை காப்பாற்ற கயிற்றை கிணற்றுக்குள் போட்டனர். இந்த கயிற்றை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஓமலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், சாரங்க பாணி, கேசவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜலட்சுமியை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×