search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதையை அதிகரிக்க ஊமத்தங்காய் கலந்து மது விற்பனை- 13 பேர் கைது
    X

    போதையை அதிகரிக்க ஊமத்தங்காய் கலந்து மது விற்பனை- 13 பேர் கைது

    ஓமலூரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, தொளசம்பட்டி,  ஜலகண்டாபுரம், நங்கவள்ளி என ஆறு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய எல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அனைவரையும் கைது செய்யுமாறு அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த பச்சியப்பன், கருத்தானூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், விருதாசம்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம், தாரமங்கலத்தை சேர்ந்த முருகன், எம்.செட்டியப் பட்டியை சேர்ந்த ஆறுமுகம், பண்ணப்பட்டி சரோஜா, பண்ணப்பட்டி தாபா ஹோட்டலில் விற்பனை செய்த ராபின், ஆரூர்பட்டி மாரியப்பன், சின்னப்பம்பட்டி  தங்கவேல், துட்டம்பட்டி சுரேந்திரன், காமலாபுரம் பெருமாள்,  சங்கீதப்பட்டி  செங்குட்டுவன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

    இவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பானங்களை பரிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக ஓமலூர் உட்கோட்டத்தில் வேறு யாராவது மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கர்  எச்சரித்துள்ளார்.
    Next Story
    ×