search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    மழை அளவு குறைந்ததால் கோவை குற்றால அருவில் நீர்வரத்து குறைந்தது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவி, பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது மழை அளவு குறைந்ததால் கோவை குற்றால அருவில் நீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×