search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பிள்ளைசாவடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு
    X

    எல்லைப்பிள்ளைசாவடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு

    எல்லைப்பிள்ளைச் சாவடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி பஜனை மடத்து தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 43). இவர், வீடு கட்டுமானத்துக்கு தேவையான ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கவுரிசங்கர் தனக்கு சொந்தமான காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். இன்று காலை பார்த்த போது, காரை காணாமல் கவுரிசங்கர் திடுக்கிட்டார். காரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. காரின் மதிப்பு ரூ. 4 லட்சமாகும்.

    இதுகுறித்து கவுரிசங்கர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து காரை திருடி சென்ற மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்.

    Next Story
    ×