search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எர்ணாவூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
    X

    எர்ணாவூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி

    எர்ணாவூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருவொற்றியூர்:

    எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகாமணி. இவரது மகன் ஜெயபாண்டி (வயது21) என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஜெயபாண்டி தனது நண்பர் பாரதியார் நகரைச் சேர்ந்த ரிக்டர் என்பவருடன் எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று நிலை தடுமாறி பாலத்தின் நடுவில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் ஜெயபாண்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரிக்டர் பலத்த காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மாதவரம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×