search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே குடிபோதையில் மோதல் - 2 வாலிபர்கள் படுகாயம்
    X

    வெங்கல் அருகே குடிபோதையில் மோதல் - 2 வாலிபர்கள் படுகாயம்

    வெங்கல் அருகே குடிபோதையில் மோதலில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #youthinjured

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் சீத்தஞ்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே நேற்று வெங்கல் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன், நண்பர் நரசிம்மன் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இவர்கள் அருகில் வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ், தினேஷ் மது அருந்தினர்.அப்போது இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன், நரசிம்மன் ஆகியோரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். இதுகுறித்து வெங்கல் போலீசில் தமிழ் செல்வன் மனைவி கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக் குப்பதிவு செய்து சார்லசை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×